Monday, June 21, 2010

அமெரிக்காவில் இந்தியர் படுகொலை

அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறி யாளர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவால் கொள்ளையடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த திரு வெங்கட சுப்ப ரெட்டி குட்டமஞ்சி (35) என்ற அவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 23 வயதுப் பெண் ஒருவரைச் சந்திப்பதற்காக கடந்த புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு டெட்ராய்ட் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் ஒரு குண்டர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கம் தெரிவித்தது.

இந்தக் கொலை தொடர்பாக ஐந்து பேரை அமெரிக்கப் போலிசார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அந்த ஐந்து பேரில் ஒருவர் வெங்கட சுப்ப ரெட்டி சந்திப்பதற்காகச் சென்ற மெக்சிகோ நாட்டுப் பெண்ணின் காதலன் என்று கூறப்படுகிறது.

காதலர்களுக்கான இணையத்தளத்தின் மூலம் திரு வெங்கட சுப்ப ரெட்டிக்கு பழக்கமானார் அந்த மெக்சிகோ நாட்டு மங்கை. கொலை செய்யப்பட்ட அன்றைக்கு திரு வெங்கட்டுக்கும் அந்த மெக்சிகோ நாட்டு மங்கையும் ஔர் உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டனர்.

சாப்பிட்ட பின் இருவரும் அருகேயுள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றிருக்கின்றனர். விடுதியின் வாயிலை யடைந்ததும் அங்கு காத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதல னும் அவரது நண்பர்கள் நான்குபேரும் சேர்ந்து திரு ரெட்டியை சுட்டுக் கொன்று விட்டு அவரது உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

சிரித்துப் பேசிக் கொண்டு உல்லாசமாகக் காரை விட்டு இறங்கிய ஒரு சில நிமிடங்களில் எல்லமே முடிந்து போய்விட்டது. காத்துக்கொண்டு நின்றவர்கள் திரு ரெட்டியை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எதுவும் கேட்கவில்லை. பார்த்ததும் படபடவென சுட்டுத் தள்ளினர். சுட்டுக் கொன்றுவிட்டு கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு காரில் பறந்துவிட்டனர்.

சம்பவம் நடந்ததைப் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் உடனடியாகப் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலிஸ், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com