Monday, June 21, 2010

யாழ் மக்கள் தொடர்பாக ஜேவிபி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. கோத்தபாய

யாழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக ஜேவிபி யினர் முதலைக்கண்ணீர் வடிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐலண்ட பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மக்கள் மத்தியில் பேசும்போது யாழ் குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்ததுடன் படையினர் தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியிருந்தார். இவ்விமர்சனம் தொடர்பாக பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலர் தான் இரண்டாம் லெப்டினண்டாக 1970 களின் ஆரம்ப பகுதியில் யாழ் குடாநாட்டிற்கு கடமைக்கு சென்றிருந்தபோது யாழ் குடாநாட்டு மக்கள் அங்கிருந்த அரசியல் கட்சிகளால் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள் என்பதை அவதானிக்க முடிந்திருந்தாக தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் சச்சரவுகள் அற்ற தேசம் உருவாவதை தடுப்பதே ஜேவிபி னரின் நோக்கம் என அவர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com