Monday, June 7, 2010

ததேகூ இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு மிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு முன்னோடியாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்று ள்ளது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப் பட்டுள்ளது. தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி யைச் சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com