Monday, June 7, 2010

Note Book ஐ நீதிமன்றில் சமர்பிக்குமாறு Frederica Jansz இற்கு நீதிமன்று உத்தரவு.

சரணடைந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டார் என முன்னால் இராணுவத் தளபதி தெரிவித்ததாக வெளியான சர்சைக்குரிய நேர்காணலின் ஒலி-ஒளி அடங்கிய note book இனை நீதிமன்றில் சமர்பிக்குமாறு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம எழுத்தாளர் பெட்றிக்கா ஜென்ஸ் இற்கு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக வெளியான செய்தி அவசரகால சட்ட திட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்ட நேர்காணலின் மூலப்பிரதி சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் note book இல் உள்ளதாகவும் அதனை அவர் விசாரணை அதிகாரிகளுக்கு தர மறுப்பதாகவும் நீதிமன்றில் தெரியப்படுத்தியதை அடுத்தே மன்று ஜெய்ன்ஸ் ஐ எதிர்வரும் 21ம் திகதி குறிப்பிட்ட ஒலி-ஒளிப்பதிவு அடங்கிய note book உடன் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com