Monday, May 3, 2010

ஈபிடிபி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வின் அரசை அழிக்கின்றது. யாழ் இராணுவத் தளபதி.

ஈபிடிபி யின் சாவகச்சேரி பிரதேசப் பொறுப்பாளர் அலக்ஸ் எனப்படும் அலெஸ்சாண்டர் சூசைமுத்து நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரியில் கடத்தி கொலை செய்யப்பட்ட மாணவன் கபில்நாத் இன் கொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஈபிடிபி உறுப்பினரான ஜீவன் என்பவருக்கு பிடிவிறாந்து பிறப்பித்தமைக்காக, சாவகச்சேரி மஜிஸ்ரேட் பிரபாகரன் அவர்களை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அலக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துப்பேசிய யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்து கத்துறுசிங்க, சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் , ஈபிடிபி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அழிப்பதாக குற்றஞ்சாட்டியதாக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com