Monday, May 3, 2010

பிரபாகரனின் தாயை நாட்டினுள் அனுமதித்தால் நீதிமன்று செல்வேன். சு.சுவாமி.

பிரபாகரனின் தாயை இந்தியாவினுள் நுழைய அனுமதிக்காமல் திருப்பியனுப்பியமை சரியானமுடிவே என தெரிவித்திருந்த டாக்டர் சுப்ரமணியசுவாமி, பார்வதியை மீண்டும் நாட்டினுள் அனுமதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்று செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரமர் ராஜீவ் காந்தி, பிரபாகரனால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து வருத்தத்தை தெரிவிக்கவோ அன்றில் கண்டனம் தெரிவிக்கவோ தவறியுள்ள பார்வதியை நாட்டினுள்ள அனுமதிப்பது நாட்டின் சிறப்புரிமையை மதிக்கும் சட்டவிதிகளுக்கு முரணானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com