Tuesday, March 2, 2010

'இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதி மன்மோகன் சிங்'

இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதி பிரதமர் மன்மோகன் சிங் என்று பிரபல பத்திரிகையான "ரீடர்ஸ் டைஜஸ்ட்" நடத்திய வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அரசியல், தொழில்துறை, சினிமா மற்றும் விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 100 பேர்களது பட்டியலை வெளியிட்டு, அவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்குமாறு தனது வாசகர்களை "ரீடர்ஸ் டைஜஸ்ட்"( Readers Digest) பத்திரிகை கோரியிருந்தது.

இதில் கலந்துகொண்டு வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதியாக பிரதமர் மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியாவின் மிக நம்பகமான மனிதர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நம்பகமான மனிதர் பட்டியலில், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இரண்டாவது இடத்திலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதே சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பகமான மனிதர் பட்டியலில், மன்மோகன் சிங்கிற்கு 7 ஆவது இடமே கிடைத்துள்ளபோதிலும், நம்பகமான அரசியல்வாதி பட்டியலில் அவர் முதலாவது இடத்தில் உள்ளார்.

இதே பட்டியலில் ராகுல் காந்திக்கு 27 ஆவது இடம் கிடைத்துள்ளது.சோனியா காந்திக்கு 72, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 50, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 73, பா.ஜனதா தலைவர் அத்வானி 94, மம்தா பானர்ஜி 96, ஷரத் பவார் 97, பிரகாஷ் காரத் 98, லாலு பிரசாத் 99 மற்றும் மாயாவதிக்கு 100 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

அதேப்போன்று "இந்தியாவில் எப்போதும் விரும்பப்படுவர்கள்" பட்டியலில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி 4 வது இடத்திலும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 5, செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 6 ஆவது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com