Saturday, March 6, 2010

புலனாய்வுத்துறை இயக்குனர் விசாரணை செய்யப்பட்டதான செய்தியில் உண்மை இல்லை.

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான பொறுப்புணர்சியற்ற செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், லசந்த கொலை தொடர்பாக 17 இராணுவ அதிகாரிளும் 2 சிப்பாய்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொன்சேகா மீதான விசாரணைகள் முடிவடையும் தறுவாயை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், சாட்சியங்களின் தொகுப்பு அடுத்தவாரம் இராணுவத்தளபதியிடம் கையளிக்கப்படும் எனவும் பணப்பரிமாற்றம் மற்றும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

இராணுவப் புலனாய்வுத்துறை தடைசெய்யப்பட்டுள்ளதாக ஊடகவியாலளர் ஒருவர் கேட்டபோது மறுதலித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் இராணுவப் புலனாய்வுத்துறையின் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இராணுவ நீதிமன்றில் ஜெனரல் பொன்சேகாவின் வழக்கு விசாரிக்கப்படும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா எனக் கேட்கப்பட்டபோது உலகில் எங்கும் அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் இது இராணுவத்தின் உள்வீட்டு விவகாரம் எனவும் தெரிவித்துடன், இது தொடர்பாக ஜெனரல் பொன்சேகா வேண்டுகொள் விடுத்தால் அதை இராணுவத் தளபதி பரிசீலிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com