Tuesday, March 30, 2010

ஒர் தமிழனின் புலம்பல்.- கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.

தமிழ் ஈழ மாயையில்
சிக்கியதால்….

தமிழர்-
மதியிழந்தனர்..
அறமிழந்தனர்..
கல்வியிழந்தனர்…
தனமிழந்தனர்…
தரமிழந்தனர்..

மானமிழந்தனர்..
பதியிழந்தனர்..
உயிரிழந்தனர்..
பாலரையிழந்தனர்..
தாரமிழந்தனர்..
தந்தையிழந்தனர்…
தாயையிழந்தனர்..
சகோதரனையிழந்தனர்…
துணையிழந்தனர்…
சுற்றமிழந்தனர்…
சூழலிழந்தனர்…

கதியிழந்தனர்…
நெறியிழந்தனர்…
நேர்மையிழந்தனர்…
கலையிழந்தனர்…
மறையிழந்தனர்…
பண்பிழந்தனர்….
தவமிழந்தனர்…
தானமிழந்தனர்..
நிலைகுலைந்தனர்…
ஆனால்……தமிழர்;
மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்


விடுதலைக்காக
அடிமைகளாயினர்.

விடிவிற்காக…
இருட்டில் தள்ளப்பட்டனர்…
வழி தவறினர்.

பிள்ளைகள் கடத்தப்பட…
பெற்றோர் பதறினர்,
உற்றோர் வருந்தினர்;
தமிழர் தமிழனை தமிழின் பெயரால்
அழிப்பதை கண்டேங்கினர்;

போர் களத்தில்,
உயிர்க்கேடயம் ஆகினர்;
வாழ்விற்கும் சாவிற்க்கும்
இடையே விழிம்பில் பரிதவித்தனர்;

அழிவின் மத்தியில் ஆக்கம்
இறப்பின் மத்தியில் பிறப்பு
பாவத்தின் மத்தியில் புண்ணியம்
கோரத்தின் மத்தியில் கருணை
அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.

உயிரைப் பேணாக் கேவலம்;
பொய், பிரட்டு, சூது, வாது,
கொலை, கொள்ளை,
அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,
கண்டனர்.

மூத்தோர் இருக்க
இளையோர் மாண்டதை..
தம்முயிரைக்காக்க
காயமுற்றோரை கைவிட்டதை…
தம்முயிரின் மேலாக
மற்றயோரதை பேணியமையை
எதிரியின் கருணையை கண்டனர்.

இன்று,
அகதிகளாய்..
ஊனமுற்றோராய்…
விதவைகளாய்…
நடைபிணங்களாய்…
நாதியற்றோராய்….
கையேந்தி நிற்போராய்…
கைதியாய்….
இருக்கும் தமிழருக்கு
தீர்வு என்ன?

இது போதாதென்று
களம் இறங்கியுள்ளனர்
தமிழ் அரசியல் கழுகுகள்..
தேர்தல் பெயரில்
பிணந்தின்ன..

கடவுளே!
போதும் நாம் பட்டபாடு..
முதலில் காப்பாற்று எம்மை
இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….

கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.VII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com