Sunday, March 21, 2010

திருமதி அனோமா பொன்சேகாவிடம் சீஐடி யினர் வாக்குமூலம்.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளனர். சீஐடி யினரின் வேண்டுதலுக்கு இணங்க இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்து வாக்குமூலம் அளிக்க தான் உடன்பட்டுள்ளதாக திருமதி பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளரான விஜித கேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் திஸாநாயக்கவிடம் அரசாங்கத்தை கவிழ்பதற்கு சூட்சிகளை மேற்கொண்டதாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com