Tuesday, March 2, 2010

அரசியல் உலகம் பார்க்கப் போகின்றோம்

அரசியல்வாதிகள் அரசுப் பணியாளர்கள் இருவரும் மக்களுக்காக, மக்கள் நலப் பணிக்காக இருப்பவர்கள். இந்த இரண்டும் சீராக இருந்தால் நிர்வாகமும் சீராக இருக்கும். நம் அமைப்பு இரட்டை மாட்டு வண்டி கூட இல்லை. மூன்று மாடுகள் இழுத்துப் போகும் வண்டி. மக்கள் தங்கள் பொறுப்பை மறந்து புழுதிவாரி கொட்டக் கூடாது. ஒரு அரசியல் பிரமுகருடன் நடந்த உரையாடல். இது கற்பனையல்ல, நிஜம்

ஏன் லஞ்சம் வாங்குகின்றீர்கள்?

லஞ்சம் என்று ஏன் சொல்லுகின்றீர்கள். வக்கீலுக்கு கொடுக்கும் பீஸ் மாதிரி இது. அவன் அவசரத்துக்கு, தேவைக்கு குறுக்குவழிலில் போகணும்னு நினைக்கறான். எங்க கிட்டே வரான் நாங்க செய்து கொடுக்கற வேலைக்கு பீஸ் வாங்கறோம்.

அவசரம், முறையற்ற கோரிக்கைகள், இந்த புத்தி, எப்படியும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆரம்பித்து வைத்தது லஞ்சம். எத்தனை நாட்கள் வெறும் பார்வையாளனாக இருப்பது, அரசாங்கப் பணியாளனாக இருந்தாலும் அவனும் மனிதன்,, அவனும் குறுக்குவழிப் பணத்திற்கு ஆசைப் பட ஆரம்பித்துவிட்டான்

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கின்றோம். நம் பாவங்களுக்குக் கூட்டாளியாக்குகின்றோம். 'எனக்கு செய்து கொடு. உன் கோயிலுக்கு வரேன். உன் உண்டியல்லே பணம் போடறேன்' கடவுள் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான்.

நேர்மையுடன் வாழ்கின்றவர்களை மேடையில் புகழ்வோம். ஆனால் கீழே இறங்கியவுடன் அவனை ஏளனமாகப் பார்த்து ,'பிழைக்கத் தெரியாதவன்' என்று கேலி பேசுவோம்.

அரட்டைக் குழு இளைஞர்களில் ஒருவன் கூறியது : 'படிப்பு முடியவும் நான் அரசியலில் சேர்ந்துவிடுவேன். சீக்கிரம் பணம் சேர்க்கலாம். மத்தவங்களை மிரட்டலாம். நம்மைக் கண்டா பயப்படுவாங்க. எதுக்காக ஒருத்தன் கிட்டே வேலை பார்க்கணும்.' அவன் பொறியல் கல்விகற்கும் மாணவன்

வன்முறை வாழ்க்கையில் கவர்ச்சி. உழைக்காமல் மிரட்டியே இலகுவாகச் சம்பாதிக்கலாம். அடுத்தவர்க்கு அச்சம் தரும் வாழ்க்கையினை நோக்கி இளம் உள்ளங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. படித்து முடிக்கவிட்டுத் தானே வேலைக்குப் போக முடியும். எதற்குக் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்?

மாற்றம் இளைஞர்களிடம் மட்டுமா ?
தன் வீட்டுக் கதவைத் தட்டி, தீமைகள் உள்ளே நுழையும் வரை மனிதன் மெத்தனமாக இருகின்றானே! நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? 'நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்று கத்தத் தோன்றுகின்றது அரசியல் பேச்சுக்கு உண்மைகள் தேவையில்லை. உரத்த குரல் போதும். கொச்சைப் பேச்சுக்களில் மனத்தின் இச்சையைத் தீர்க்கும் களம்.

மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதைவிட, நிந்தாஸ்துதி கச்சேரிகள் தான் அதிகம் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை.

1 comments :

Anonymous ,  March 2, 2010 at 7:36 PM  

Politics is almoist a study of the society,country's economy,health and education.Every politician should have the maximum ability to handle the above matters.Srilanka has number of academically quailfied personalities,but we poor voters owing to lack of political knowledge look for only the" stage play conducting politicans ",because we're attracted of their rhyming
speeches.We need to think the country need effcient guys to the parliament and not the debaters or stage dancers to the parlialment,until the voters correct themselves the country have to face maximum serious problems.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com