Saturday, March 27, 2010

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கட்சியை லண்டன் ஏற்றதற்கு இலங்கை எதிர்ப்பு.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி எனும் அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அக்கட்சியின் சின்னமாக புலிச் சின்னைத்தை பிரித்தானிய அரசு ஏற்றுக்கொண்டமைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பிரிட்டன் அரசாங்கம் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த கட்சியை பதிவு செய்வதற்கு முன்னர், தங்களிடம் பிரிட்டன் எவ்வித கருத்துக்களையும் கோரவில்லை என இலங்கை அரசு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதே சமயம் அக்கட்சி பதிவு தொடர்பாக, பிரிட்டன் அரசு தரப்பில் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com