Monday, March 15, 2010

திருமலையில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை கொழும்பு வீதியில் மட்கோ சந்தி எனுமிடத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை செய்தனர். அப்பிரதேசத்தில் அப்பாவி பொது மகன் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்டதை கண்டித்தே இப்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் „ அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதை கண்டிக்கின்றோம்' , „ நீதியை நீலைநாட்டுவதற்கு ஒன்று திரள்வோம்' என்ற பதாதைகளை சுமந்து நின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும் , அவ்வணுகுமுறைகள் கைகூடாத நிலையில் , பாரபட்சம் அற்ற விசாரணைகள் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதிவழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com