Thursday, March 25, 2010

ஹி‌ட்லரின் கடிதம் 8,000 பவுண்ட்களுக்கு விற்பனை

ஜெர்மன் சர்வாதிகாரி அட்லாஃப் ஹிட்லர் எழுதிய கடிதம் ஒன்று 8,000 பவுண்ட் தொகைக்கு ஏலத்தில் விற்பனை ஆகி உள்ளது. 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று ஹிட்லர் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.பிரிட்டன் - ஜெர்மனிக்கு இடையே இருந்த நல்லுறவை ஹிட்லரின் இந்த கடிதம் வெளிப்படுத்துவதாக உள்ளது.

பிரிட்டன் பத்திரிகையாளர் செப்டன் டெல்மர் என்பவர், பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து தமது பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதுமாறு அழைப்பு விடுத்து, ஹிட்லருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்தே ஹிட்லர் மேற்கூறிய கடிதத்தை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com