Monday, March 1, 2010

ஜெர்மனி-ஸ்பெயின்-பிரான்சில் பயங்கர புயல்: 51 பேர் பலி

மேற்கு ஐரோப்பாவில் வீசிய ரடும் புயல் காற்றில் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்சுகல், பெல்ஜியத்தி்ல் 51 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் 'சிந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் புயலுடன் பெய்த கன மழை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் மட்டும் 45 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 1999ம் ஆண்டுக்குப் பின் பிரான்ஸைத் தாக்கிய பயங்கர புயல் இதுவாகும். இதையடுத்து பிரான்சில் தேசிய பேரழிவு அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

பலியான 45 பேரில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் நீர் புகுந்ததால் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானவர்களைக் காணவில்லை.

பிரான்சில் மின்சாரமும் தடைபட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கன மழையால் ஸ்பெயினில் 3 பேரும், ஜெர்மனியி்ல் ஒருவரும், போர்சுகலில் ஒரு குழந்தையும் பலியாயினர்.

ஆல்ப்ஸ் மலை பகுதியிலும் கன மழை பெய்து வருவதால் பெரும் பனிச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கன மழையுடன் புயல் காற்றும் வீசுவதால் இந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடிங்கி வீசப்பட்டுள்ளன.

இதனால் இந்த நாடுகளில் விமான சேவையும், ரயில் போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com