Monday, March 1, 2010

வேட்பாளர் மனுவில் மோசடி : சிஐடி யிடம் முறையிடப்போகின்றேன் என்கின்றார் திஸ்ஸ.

மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் மொனறாகலை மாவட்டத்திற்கான வேட்பு மனு பாரமளிக்கப்பட்டபோது, அவ்மனுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) வேட்பாளர் ஒருவரின் பெயர் ரிபெக்ஸ் பண்ணி அழிக்கப்பட்டு வேறொருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த ரணில், மொனராகலை மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய முன்னணியின் குழுத்தலைவர் மடும பண்டாரவே இச்சம்பவத்திற்கு முழுப்பொறுப்பு என தெரிவித்திருந்தார். அத்துடன் வேட்பாளர் மனுவில் தான் எவ்வித மாற்றமும் செய்யவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த வேட்பாளர்பட்டியலை தெரிவத்தாட்சி அலுவலரிடம் தான் அப்படியே பாரமளித்ததாகவும் மடும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் 16ம் திகதி இரவு வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருந்தாகவும் மோசடி மூலம் தனது பெயர் பட்டியலிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டது என்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சீஐடி யில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொனறாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட திஸ்ஸ குட்டியாராட்சி அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com