Tuesday, February 2, 2010

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மரண அச்சுறுத்தல்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமானவர்கள் நடமாட ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் அவரது வீட்டின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசாங்கத்தின் அனுசரனையுடன் துணை இராணுவக் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் இதனால் பாதுகாப்பு கருதி உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கத்தில் உள்ள பிரபல அமைச்சர்கள் சிலர் முன்னாள் நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com