Tuesday, February 2, 2010

புலிச் சந்தேக நபர் கைது.

கெப்பற்றிகொல்லாவ பிரதேச்தில் கடந்த 2006ம் ஆண்டு 64 சிவிலியன்களை பலிகொண்ட குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படும் புலி உறுப்பினர் ஒருவர் தேருநுவர விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

1990ம் ஆண்டு புலிகளியக்கத்தில் இணைந்து கொண்ட மகாலிங்கம் முத்துலிங்கம் எனும் இவர் , புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைபிரிவைச் சேர்ந்தவர் எனவும் அவரது இயக்கப்பெயர் இந்திரன் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளாக தெரிவித்துள்ள பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மேற்படி தாக்குதலில் 8 புலி உறுப்பினர்களுக்கு தொடர்புடையதாக சந்தேக நபர் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com