Monday, February 15, 2010

மாத்தறை மேயர் மீது விசாரணை.

மாத்தறை நகரசபை மேயர் உபுல் நிஸாந்த மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகரசபை நிர்வாகம் மற்றும் நிதிவிவகாரங்களில் மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக நகரசபை உறுப்பினர்களால் கொடுக்கப்பட்டுள்ள புகாரை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை முதல்வர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.

குற்றஞ்சுமத்தப்பட்டுள மாநகர சபை மேயர் உபுல் நிஸாந்த ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், தன்மீது ஆரம்பமாகின்ற விசாரணைகள் மோசடிகள் நிமிர்த்தம் அல்லவெனவும், தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்ததற்கான பதிலடியே எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com