Monday, February 15, 2010

தனுக்க திலகரட்ணவின் தாயாரின் லொக்கரில் யுஎஸ் டொலர்கள் உண்டாம்.

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுக்க திலகரட்ணவின் தாயாரின் பாதுகாப்பு லொக்கரை கடந்த வெள்ளிக்கிழமை சீஐடி யினர் சீல் வைத்திருந்தனர். தனுக்கவின் தாயாரின் முன்னிலையில் அவ் லொக்கரை இன்று திறந்து சோதனை செய்த சீஐடி யினர் லொக்கரில் 525.000 அமெரிக்க டொலர்கள் இருக்க கண்டுபிடித்துள்ளனர் என அததெரண இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இப்பணம் தொடர்பாக தனுக்கவின் தாயான அசோகா திலகரட்ணவிடம் சீஐடி யினர் விசாரணை செய்தபோது, ஜெனரல் பொன்சேகாவினுடைய பணம் எனவும் அவரின் வேண்டுதலுக்கு இணங்க தான் இப்பணத்தை தனது லொக்கரில் வைத்திருந்தாகவும் அவர் தெரிவித்தாக அவ்விணையம் மேலும் தெரிவிக்கின்றது.

தனுக்க திலகரட்ண தனக்கு சொந்தமான ஆயுத வியாபார முகவர் நிறுவனம் ஒன்றினூடாக இலங்கை இராணுவத்திற்கான ஆயுத வழங்கல் கொந்தராத்துக்களை செய்திருந்தாகவும், அவற்றினூடாக ஜெனரல் பொன்சேகாவின் உதவியுடன் பெருந்தொகையான தரகு கூலிகளை பெற்றிருந்தாகவும் அரசதரப்பினால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளார் என்பதும் அவரது கடந்த கால ஆயுத வழங்கல்கள் தொடர்பாக இலங்கை அரசு அதிதீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதும் யாவரும் அறிந்தவிடயமே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com