Monday, February 15, 2010

ராஜபக்சவிற்கு உயிரச்சுறுத்தல்.

ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்சவிற்கு கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து தொலைபேசி ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜெனரல் பொன்சேகா சார்பாக வழக்குத்தாக்குதல் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜெனரல் பொன்சேகா உட்பட நாட்டின் பிரஜைகள் சகலருக்கும் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் யாப்பில் இடமுண்டு என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com