Monday, February 22, 2010

‘இணைய ஊடுருவலில் எங்களுக்கு சம்பந்தமில்லை’

இணையத்தில் தேடல் சேவை வழங்கி வருப் பிரபல கூகல் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சீனா ஊடுருவியதாக கூகல் சென்ற மாதம் அறிவித்திருந்தது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஆகவே சீனாவிலிருந்து வெளியேறப்போவதாகவும் கூகல் அண்மையில் கூறியது.

இணைய ஊடுருவலில் சீனாவில் உள்ள இரு கல்வி நிலையங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவ்விரு பள்ளிகள் பயன்படுத்திய கணினிகள் மூலமாகவே இணைய ஊடுருவல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் தகவல் கூறியது.

ஆனால் இணைய ஊடுருவல் விவகாரத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஷங்காய் ஜியோடோங் பல்கலைக்கழகமும் லான்ஜியாங் தொழில் கல்விக்கூடமும் தெரிவித்துள்ளன. அவ்விரு கல்வி நிலையங்களுக்கும் சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதையும் அந்த கல்வி நிலையங்கள் மறுத்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com