Monday, February 22, 2010

பொலிஸ் காவலில் இருந்த கைதி தண்ணிக்குள் குதிச்சிட்டாராம்.

பொலநறுவை இங்கினியாகல பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இங்கினியாகல சமுத்திரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என எழும் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், குறிப்பிட்ட சந்தேக நபர் மொறகஹாபாலம் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் கிளர்ச்சியை வன்செயலை தூண்டியமை , விகாரையின் பிரதான பிக்குவை அச்சுறுத்தியமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தாகவும், மேலதிக விசாரணைகளின் பொருட்டு அழைத்துச் சென்றபோது அவர் சமுத்திரத்தில் குதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்மரணம் தொடர்பாக பிரதேசத்தில் பலத்த பதட்ட நிலைமை உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இறந்தவரின் மனைவி கதறி அழுவதை படத்தில் காண்கின்றீர்கள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com