Tuesday, February 16, 2010

ஜெனரல் பொன்சேகாவின் மருமகனைக் காணவில்லையாம்.

ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கான ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் மோசடிகள் உள்ளதாகவும் அவற்றுக்கும் ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ணவிற்கும் தொடர்புகள் உண்டெனவும் இலங்கை அரசாங்கத்தினால் சுற்றஞ்சுமத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை நேற்று சீஐடி யினர் கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அவர் எங்கிருக்கின்றார் என தெரியவில்லையென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா என அவரைக்கேட்டபோது, அது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தனுன ஒழித்துவிட்டார் என மக்களுக்கு காண்;பிப்பதற்காகவே இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாக எதிர்த்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com