Friday, February 26, 2010

மெக்சிகோ நாட்டில் 13 பேர் சுட்டுக்கொலை மர்ம மனிதன் “திடீர்” தாக்குதல்

மெக்சிகோ நாட்டில் மர்ம மனிதன் 13 பேரை சுட்டுக்கொன்றான். மெக்சிகோ நாட்டில் உள்ள ஏசாகா என்ற இடத் தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் காரில் வந்தான்.அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஆண் மற்றும் அவருடைய 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றான்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும் நோக்கி அவன் சரமாரியாக சுட்டான். அவர்களில் 4 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் காரில் ஏறி தப்பி ஓடினான். போலீசாரும் காரில் அவனை விரட்டி சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் சரமாரியாக சுட்டான். இதில் 5 போலீசார் உயிர் இழந்தனர்.

13 பேரையும் கொன்று விட்டு மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவன் யார் என்ற விவரம் தெரியவில்லை.

மெக்சிகோ நாட்டில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள தாமுலி பாஸ் என்ற இடத்தில் போலீசார் போதை மருந்து கும்பல் இடையே நடந்த சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com