Wednesday, January 27, 2010

என்னை விடுவியுங்கள் என்கின்றார் தேர்தல்கள் அணையாளர்.

நான் வகிக்கும் பதவி மற்றும் சகல பொறுப்புக்களிலுமிருந்தும் என்னை விடுவியுங்கள் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவினை அறிவித்து முடித்தவுடன் ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள தேர்தலின்போது பல அரசியல் கட்சிகளாலும் தன்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களை மேலும் தன்னால் தாங்கமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர், அரச ஊடகங்கள் தேர்தல்காலங்களில் நடந்து கொண்ட விதத்திலும் , அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் தனது கட்டளைகளை நிராகரித்த விதத்திலும் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com