Sunday, January 24, 2010

விமானத்தை தகர்க்க நடந்த முயற்சிக்கு பின்லேடன் பொறுப்பு ஏற்றார்

கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவில் டெட்ராய்ட் நகருக்கு சென்ற விமானத்தை குண்டை வெடிக்கச்செய்து தகர்க்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த அப்துல் முத்தலீப் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில் தான் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும், ஏமன் நாட்டில் தீவிரவாத பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்தான். இப்போது அல் ஜசீரா டி.வி. சேனல் பின்லேடன் குரலில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆடியோ டேப்பை ஒலிபரப்பியது. அதில் பேசிய பின்லேடன், இந்த தாக்குதல் முயற்சிக்கு நான் தான் காரணம் என்று பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com