Sunday, January 24, 2010

தேர்தல் பிரச்சாரங்களைக் கைவிடுமாறு தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு உத்தரவு.

தேர்தல் பிரச்சாரங்களுக்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் ஊடகவியலாளர் மாநாடுகள் , தேர்தல் பிச்சராங்களை எதிர்வரும் 48 மணித்தியாலயங்களுக்கு கைவிடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி வாக்களிக்கும் பொருட்டு தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 4 மணித்தியாலயங்கள் கொடுப்பனவுகளுடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் வாக்களிப்புக்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம் தற்காலிக அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் அம்மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள 45732 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக விசேட கொத்தணி வாக்குகளிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com