Wednesday, January 20, 2010

தேர்தலின் பின்னர் அலுவலக படி மிதிக்க மாட்டேன். தேர்தல்கள் ஆணையாளர்.

இலங்கையில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்பதனை தனக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி மிகவும் நேர்மையாக பல தேர்தல்களை பக்கசார்பில்லாமல் நடாத்தி முடித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, இதுவே தான் நாடத்தி முடிக்கவுள்ள இறுதி தேர்தல் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அவர், இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகள் மற்றும் அரச ஊடகங்களின் பக்கசார்பு நிலைமைகளையிட்டு தான் கொண்டுள்ள ஏமாற்றத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன், தனது வேண்டுதல்களுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாத நிறுவனங்களுடன் எதிர்காலத்தில் தனக்கு தேர்தல்களை நடாத்த முடியாது எனவும் இத்தேர்தலே தான் நாடாத்தி முடிக்கவுள்ள இறுதி தேர்தலாக அமையப்போகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com