Wednesday, January 20, 2010

பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீதிமன்று தடையுத்தரவு.

புத்தளத்தில் இன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு நீதிமன்று தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தளம் பொலிஸ் நிலைய பிரத பரிசேதகர் கிங்ஸ்லி குணசேகர அவர்கள் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளை ஏற்ற புத்தளம் மஜிஸ்ரேட் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளில் பிரதேசத்தில் கொல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி் ஆதரவாளரின் இறுதிக் சடங்குகள் இன்று நடைபெறவிருக்கின்ற இத்தருணத்தில் வன்செயல்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு அதிக பொலிஸாரை குவிக்கவேண்டியுள்ளதாவும் , தேர்தல் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பளிக்க போதிய பொலிஸார் இல்லை எனக்கூறி குறிப்பிட்ட பிரச்சாரக் கூட்டத்தை ரத்துச்செய்யுமாறு வேண்டப்பட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com