Friday, January 15, 2010

கட்சித்தாவல்களும் அதன் பின்னால் இடம்பெறும் சூதாட்டங்களும்-

விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம். முசம்மில் அவர்கள் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக, ஜெனரல் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு இறுதி நேரத்தில் பல்டி அடித்த சுவாரசியமான அரசியல் கேலிக்கூத்து ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து வெளியேறிச் சென்று பிறிதொரு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய பா.உ முசம்மில், ரணில் விக்கரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் என்னை அழைத்து சரம்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறும், அவ்வாறு ஆதரவு வழங்கினால் 300 மில்லியன் பணமும் வெளிநாடு ஒன்றில் வாழ்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும்; கூறினர். அதன்பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அவர்களின் ராஜகிரியவில் உள்ள காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் அங்கும் பா.உ ரவி கருணாநாயக்க இருந்தார். ஜெனரல் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்று உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிகுமாறும் என்னை வேண்டினர். அத்துடன் பா.உ மயோன் முஸ்தபா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று என்னிடம் பணப்பெட்டி ஒன்றை தந்தனர். அந்தப்பணத்தை எண்ணுவதற்குக்கூட எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு சென்றிருந்தேன் அனால், ஜெனரல் சரத் பொன்சேகா ஊழலை அழிக்கப்போவதாக கூறிக்கொண்டு இந்நாட்டுக்கு செய்யப்போகின்ற அநியாயத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவ்விடத்திலிருந்த ஊடகவியலாளர்களுக்கு நடந்த உண்மைகளை கூறினேன் என்ற அவர் மயோன் முஸ்தபாவினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் பணப்பை ஒன்றையும் அங்கு காண்பித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com