Monday, January 25, 2010

லங்காஈநியூஸ் உடகவியலாளர் கடத்தப்பட்டுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிரதம ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரகீத் எக்நெலியகொட நேற்று பிற்பகல் 9.30 மணியிலிருந்து காணமல்போயுள்ளார். இவர் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கான செய்தி வழங்குனர் என்பதுடன் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று பிற்பகல் லங்கா ஈ நியூஸ் காரியாலயத்தில் இருந்து வீடு நோக்கிச் சென்ற அவர் வீடு சென்றடையவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று பிற்பகல் 9.30 இற்கு பின்னர் அவரது கையடக்க தொலைபேசி பாவனையில் இல்லை எனவும் கடத்தல் காரர்களால் அது பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. கடைசியாக நேற்று பி.ப 9.30 மணியளவில் அவரை தொடர்பு கொண்ட நண்பர் ஒருவருக்கு தான் கொஸ்வத்தை நோக்கி செல்லவில்லை என அவர் கூறியதாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் அவரது ஹோமாகம வில் உள்ள வீட்டிற்கு அருகில் இலக்கத்தகடு பொருத்தப்பட்டிராத வெள்ளைவான் ஒன்று தரித்து நின்றதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இவர் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com