Wednesday, November 4, 2009

பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணி இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எதிர்கட்களினால் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

பொதுவான வேட்பாளராக ஊடகங்களில் ஊகம் தெரிவிக்கப்படும் ஒருவரே நியமனம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதே நேரம் அவர் கூட்டு முன்னணி சார்பாக தேர்தலில் குதித்தால் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யும் முன்னணியில் இணைந்து கொள்ளும் என நம்பகமாக தெரியவருகின்றது.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ, எஸ்பி திஸாநாயக்க ஆகியோருக்கு தேர்தலில் நிற்க ஆர்வம் உள்ளதாகவும், பொது வேட்பாளர் விடயத்தில் அவர்களது விருப்பு எவ்வாறு என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com