லங்கா பத்திரிகையின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு விடுதலை.
லங்கா எனப்படும் சிங்கள மொழிப் பத்திரிகையின் ஆசிரியர் சந்தண சிறிமால்வத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் கைசெய்யப்பட்ட அவர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார்.
இவரிடம் கடந்த 16ம் திகதி பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கும் இடையே உருவாகிவரும் முரண்பாடு தொடர்பாக எழுதப்பட்டிருந்த விடயம் சம்பந்தமாக வினவப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment