பசில் திடீர் மனமாற்றம். எம்பி பதவியை இராஜினாமா செய்யவில்லை.
ஜனாதிபதி செயலாளரான பசில் ராஜபக்ச அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவதாக கொண்டிருந்த முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அப்பதிவியில் தொடர்ந்தும் நீடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான பொது அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பசில் அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது தான் எதிர்கொள்ளக் கூடிய வேலைப்பளுவை கருத்தில் கொண்டு இராஜினாமா செய்ய முடிவ செய்திருந்தார். ஆனால் அம்முடிவு உசிதமானது அல்ல என்பதை அவரது நண்பர்கள், அரசியல் அவதானிகள் எடுத்துக் கூறியதை அடுத்து முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment