நிசாந்த முத்துகெட்டிகம விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை.
நிசாந்த வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்.
தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்டபாளரும், கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தவருமான நிசாந்த முத்துகெட்டிகம, காலி மாவட்டத்தில் 71000 இற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தபோது, கட்சியின் உயர் பீடத்தின் உத்தரவின் பேரில் தேர்தலில் தனக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நிசாந்த சிரச தொலைக் காட்சியில் தோன்றி நேரடியாக தெரிவித்திருந்தார். அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகளில் மோசடி இடம்பெற ஒத்தாசை புரிந்தாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் பிற அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் தொலைக் காட்சியில் மேலும் கூறியிருந்தார்.
அதே நேரம் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், தனக்கு நிசாந்த முத்துகெட்டிகம கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், தனது அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் சம்பந்தப்பட்டவர்ளை பணித்துள்ளார்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிசாந்த முத்துகெட்டிகம விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்வுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிசாந்த தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சில் 20 வருடங்கள் அங்கம் வகிப்பதாகவும், அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்த தனது தந்தை கட்சியின் ஆரம்ப உறுப்பினர் எனவும் தெரிவித்த அவர் ஒழுக்காற்று நடவடிக்கையை எவ்வாறு கையாள்வது என்பது தனக்கு தெரியும் எனவும், எவ்வாறன நடவடிக்கையையும் தான் எதிர் கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
நிசாந்த முத்துகெட்டிகம சிரச ரிவி க்கு பேட்டி வழங்கி சில மணித்தியாலயங்களில் அவர் கட்சின் உயர் பீடத்தின் நடவடிக்கை ஒன்றுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர் கொழுப்பு கொண்டு செல்லப்பட்டு கலதாரி ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டள்ளதாகவும் இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. எம்எஸ்டி எனப்படும் மந்திரிகள் பாதுகாப்பு பிரிவினரால் கொழும்பு கொண்டுவரப்பட்ட அவர் மேற்படி 5 நட்சத்திர ஹோட்டலில் 208 இலக்க அறையில் தடுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும், அவ் அறைக்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு எம்எஸ்டி யினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும், தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என நிசாந்த பல ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டவேண்டியதாகும்.
0 comments :
Post a Comment