Tuesday, October 27, 2009

போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்கின்றது ஐ.நா.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான சுயாதீனான விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் என்ன நடந்தது என்ன நடக்கவில்லை என்ற விடயம் மிகவும் ஆழமாக விசாரிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான உயரிஸ்தானிகர் பயங்கரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தம் தொடர்பாக விடை காணப்படாத வினாக்கள் மிகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் உயரிஸ்தானிகத்தை மேற்கோள் காட்டிய அமெரிக்காவின் குரல் (Voice of America) இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள், கடுமையான மனித உரிமை மீறல்கள் என்பன இடம்பெற்றதாக இல்லையா என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com