புலிகளினால் தகவல் சேகரிப்புக்கு அமர்த்தப் பட்டிருந்தவர் கைது.
சிலாபம் பகுதியில் புலிகளினால் தகவல் சேகரிப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அரச புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் செயலிழந்துள்ள புலிகளியக்கத்திற்காக குறிப்பிட்ட நபர் கொழும்பு துறைமுகப் பிரதேச தகவல்களை திரட்டியுள்ளமை வெளிவந்துள்ளது.
இவரின் இச்செயற்பாடுகளுக்காக 19 மீற்றர் நீளமான 25 குதிரைவலுக் கொண்ட படகு ஒன்று புலிகளினால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து புலனாகியுள்ளது.
0 comments :
Post a Comment