Tuesday, October 6, 2009

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் ஓருவர் சுட்டுக்கொலை.

பூந்தோட்டம் சீநகர் பிரதேசத்தில் சந்தேத்திற்கு இடமான மூவர் நடமாடியுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் அவர்களைச் சுற்றிவளைத்தபோது, ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை மக்களுக்கு காட்டி விரட்டி விட்டு, அம்மூவரும் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர்.

சம்பவம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது அப்பிரதேசத்தை சுற்றி வளைத்த பொலிஸார் அம்மூவரையும் இனங்கண்டு அவர்களை அணுகிய போது, துப்பாக்கிதாரி பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது, திருப்பி பொலிஸார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கிரேனேட் ஒன்றை பொலிஸார் மீது வீசியபோது, அக்குண்டு வெடிக்கவில்லை எனவும் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com