பொது வேட்பாளர் தொடர்பாக அரசாங்கம் கவலைப் படுகின்றது. ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பாக நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை. ஆனால் அவ்வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவாக இருக்க கூடுமா என அரசாங்கம் கவலை கொண்டுள்ளதை உணர முடிகின்றது என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்று கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு கூறிய எதிர்கட்சித் தலைவர், வேட்பாளர்கள் தொடர்பாக ஊகங்களை தெரிவிக்க ஊடகங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசு ஊடகங்களை கட்டுப்படுத்த முனைகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment