இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக விசாரணை நடாத்த ஜனாதிபதி உத்தவிட்டுள்ளாராம்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் அரச படைகள் பாரிய அளவில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நாடாத்த விசேட குழுவொன்றை நியமிக்க அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வடக்கின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பேசிய அவர், குற்றச்சாட்கள் எழுகின்றபோது அது தொடர்பாக விசாரணைகளை நாடாத்துவது ஜனநாயக நாடொன்றின் கடமையாகும். அந்த வகையிலேயே அரச அதிபர் இவ்வாறான ஒரு முடிவை எடுத்திருக்கின்றார். குறிப்பிட்ட குழுவினர் தமது விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளித்ததும் அவர் அது தொடர்பான முடிவை எடுப்பார். நான் ஜனாதிபதியின் தீர்மானத்தை அமெரிக்க தூதுவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். தூதுவர் மிகவும் மகிழ்சியடைந்தார் என மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment