கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் யூனிஸ்கான்
பாகிஸ்தான் அணி கேப்டன் யூனிஸ்கான் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நீïசிலாந்து அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்ததாக கூறப்பட்டது. இதுதொடபாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் தனது கேப்டன் பதவியை யூனிஸ்கான் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவருடைய ராஜினாமாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment