ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பை ஜேவிபி நிராகரிக்கின்றது.
எதிர்கட்சிகளினால் உருவாக்கப்படும் பொது கூட்டு முன்னணியுடன் ஜேவிபி யை இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜேவிபி நிராகரிப்பதாக அக்கட்சியின் பொது வேட்பாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதற்காக அமைக்கப்படும் கூட்டு முன்னணியுடன் எந்தக்கால கட்டத்திலும் ஜேவிபி இணையமாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்படும் எதிர்கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜேவிபி யினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment