பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல வீடு திரும்பினார்.
செலிங்கோ நிறுவனத்தின் தலைவரும் இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான தேசமானி லலித் கொத்தலாவல அவர்கள் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளுடனான பிணையில் வீடு திருப்பினார்.
கோல்டன் கீ கடனட்டை மற்றும் வங்கி வைப்பு விடயங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட அவர் கடந்த 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றும் பிணை வழங்கிய போது பலத்த நிபந்தனைகளை விதித்திருந்தது.
50 லட்சம் றொக்கப்பிணையாக செலுத்தப்படவேண்டும், 1 கோடி சரீரப் பிணைக்காக கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வருமான வரி செலுத்துவோர் ஐவர் பிணை நிற்கவேண்டும். அவர் கொண்டுள்ள சகல வீசாக்கள், பிரயாண பத்திரங்கள், கடவுச்சீட்டு என்பனவற்றை உச்ச நீதிமன்றில் பாரம் கொடுக்கவேண்டும், அத்துடன் மேல் மாகாண சபை எல்லைக்கு வெளியே நீதிமன்ற உத்தவின்றி செல்லக்கூடாது என பல மிகவும் கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சகல பிணை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பூரணப்படுத்தியவராக இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு திரு. லலித்கொத்தலாவல வீடு திரும்பியுள்ளார்.
0 comments :
Post a Comment