சரத்பொன்சேகா அரசியலில் குதிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு தீவிர முயற்சி. லங்கா இரிதா
முன்னாள் இராணுவத் தளபதியும் முப்படைகளின் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலினுள் நுழைவதை தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக லங்கா இரிதா எனும் சிங்களப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
அச்செய்தியில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்குவதை தடுக்கும் பொருட்டு அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன எம்பி யாக பாராளுமன்றத்தினுள் உள்வாங்க அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அதன் பொருட்டு அரசின் உயர் மட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினிமா செய்ய இருந்தபோதும் ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி முயற்சி தோல்வி கண்டதையடுத்து அவருக்கு அமெரிக்கா அல்லது பிரித்தானியாவில் பாதுகாப்பு ஆலோசராக நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசின் முக்கிய புள்ளி ஒன்று முயற்சித்தாகவும் அம்முயற்றி நிறைவேறவில்லை எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment