Sunday, October 18, 2009

வவுனியா வில் கொள்ளையில் ஈடுபட்டவன் இனம்காணப்பட்டான். (முன்னாள் புலி)

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையில் ஈடுபட்டுச் செல்கையில் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது, மக்களின் முற்றிகையை உடைத்து செல்வதற்காக துப்பாக்கிப் பியோகம் செய்து ஒருவரை கொன்று விட்டு தப்பித்துச் சென்ற கொள்ளையன் மக்களினால் இனம் காணப்பட்டுள்ளான்.

மூன்று முறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த, சுப்புண் எனும் பெயரில் வவுனியா மக்களினால் அறியப்பட்டிருந்த முன்னாள் புலியே இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு லட்சம் ரூபா பணத்தையும் 26 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்ற முன்னாள் புலியின் துப்பாக்கி பிரயோகத்தில் 36 வயதுடைய இராமமூர்த்தி புலேந்திரன் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரனது கால் அகற்றப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com