புதிய பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரியா நியமிக்கப்படலாம்.
பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்தின எதிர்வரும் வாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா அவர்கள் நியமனம் பெறலாம் என நம்பகரமாக தெரியவருகின்றது.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான திரு. மஹிந்த பாலசூரியா அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக இயக்குனராகவும், விசேட அதிரடிப்படையின் சிறப்பு கட்டளைத் தளபதியாகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment