Tuesday, October 20, 2009

Bangkok இல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 45 இலங்கையர்கள் கைது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் இல் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை கைது செய்யும் பொருட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தினரால் இன்று காலை 6.30, மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என்பதுடன் இவர்களில் 15 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் எனவும் ஏனைய 30 பேரில் இருபாலாரும் அடங்குகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடா மற்றும் இந்தோனேசிய கடற்பரப்பில் பிடிபட்ட கப்பல்களின் பின்னணியில் உள்ள ஆட்கடத்தல் முகவர்களில் சிலர் தாய்லாந்து நாட்டில் இருந்து செயற்படுவதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகள் அவர்களை கைது செய்யும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com