Wednesday, September 30, 2009

உதவி பொலிஸ் பரிசோதகர் தற்கொலை.

திருமலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 26 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகரின் அறையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்திற்கான பின்னணி தொடர்பாக திருமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com