Wednesday, September 30, 2009

விமானத்தை வழிமறித்த பறவைகள்: அவசரமாக தரையிறக்கம்

ஜெர்மனியின் டஸ்ஸல்டெர்ப் விமானநிலையத்தில் இருந்து கொசோவாவுக்கு 155 பயணிகளுடன் போயிங் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த பகுதியில் திடீரென பறந்து வந்த பறவைகளின் கூட்டம் ஒன்று விமானத்தின் பாதையில் குறுக்கிட்டன. பறவைகள் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் அவை விமானத்தின் வலது பக்க என்ஜினில் சிக்கி கொண்டன. இதனால் அந்த என்ஜின் பழுதானது. இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரையிறக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். சுமார் 45 நிமிட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த விமானம் பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விமானத்தின் பாதையில் பறவைகள் குறுக்கிட்ட காட்சி பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் தி பேர்ட்ஸ் படக்காட்சியை போல இருந்ததாக இச்சமபவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com